ஞாயிறு, 24 ஜனவரி, 2016

மழைக்கு இறையான குடிசை



கும்மிடிப்பூண்டி நவ. 13: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள குடிசை பகுதியில் இரண்டு குடிசைகள் மழையால் இடிந்தன.
கும்மிடிப்பூண்டி பெருந்து நிலையத்திற்கு அருகிலுள்ளது கல்லுக்கடைமேடு பகுதி இங்கு குடிசைகள் அதிகம் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் கனமழை மற்றும் காற்றின் காரணமான இப்பகுதியிலுள்ள இரண்டு குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமான ஏற்கனவே பழுதடைந்திருந்த ஓர் குடிசை வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு குடிசை சுவற்றின் மீது விழுந்தது. பழுதடைந்திருந்த குடிசையில் ஆட்கள் யாரும் இல்லை ஆனால் மற்றொர வீட்டில் மாணிக்கம் என்பவரும் அவரது மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழைந்தைகள் இருந்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் சாந்தி வலது கை அடிபட்டு அருகிலுள்ள பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த குடிசையை சேர்ந்தவர்கள் அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். குடிசைகள் இருந்த பகுதி புறம்போக்கு நிலம் என்கதால் பேருராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக